சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.110
திருநாவுக்கரசர்
தேவாரம்
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.110  
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,
பண் - கொல்லி (திருத்தலம் பசுபதித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி, ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும் காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல் பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [1] |
உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும் படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [2] |
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால் வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப் பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [3] |
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும் பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப் பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [4] |
இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும் சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி, படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [5] |
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள், சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே! | [6] |
துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்- பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [7] |
சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்- மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே! | [8] |